1. Home
  2. தமிழ்நாடு

தொண்டர் வீசிய மாலை கழுத்தில் போட்டு தம்ப்ஸ் அப் செய்த விஜய்..!

1

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழககம் கட்சியின் பூத் கமிட்டி ஏஜென்டுகளுக்கான இரண்டாவது நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. முதல் நாள் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் சேலம் நாமக்கல் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பூத் ஏஜென்டுகள் பங்கேற்றனர்.

அப்போது மக்களின் பிரச்சினைகளை எப்படி கையாள்வது? மக்களின் பிரச்சனைகள் எப்படி கேட்டு அறிவது என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் அவிநாசி சாலையில் தான் தங்கி இருந்த நட்சத்திர விடுதியில் இருந்து கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

அப்போது வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் சாலையில் திரண்டிருந்தார். விஜய்யின் வருகையால் அவர் செல்லும் பாதையின் ஒரு மார்க்கத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் சாலை ஓரத்தில் விஜயை காண காத்திருந்தனர்.


வாகனத்தின் உள்ளே அமர்ந்து வந்த விஜய், தொண்டர்களின் ஆர்வத்தை பார்த்து அவர்களை மகிழ்விப்பதற்காக ரூஃப்பை திறந்து மேலே வந்தார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது விஜய்க்கு கட்சி கொடியை மாலையாக எறிந்தும் மலர்களை தூவியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை தனது கழுத்தில் போட்டுக்கொண்டும் பின்னர் அதனை தொண்டர்களை நோக்கி வீசியும் உற்சாகப்படுத்தினார் விஜய்.


அப்போது தொண்டர் ஒருவர் வீசிய ரோஜாப்பூ மாலையை எடுத்து தனது கழுத்தில் போட்டுக் கொண்டார் விஜய். மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில் அந்த தொண்டரை பார்த்து தம்ப்ஸ் அப் செய்தார் விஜய். அப்போது தொண்டர்கள் சிலர் விஜய்யின் வாகனத்தில் ஏற முயன்றதால் உடன் சென்ற பவுன்சர் அவர்களை தடுத்து இறக்கிவிட்டார்.

Trending News

Latest News

You May Like