1. Home
  2. தமிழ்நாடு

தன் தந்தை வீரப்பன் பற்றி , ஸ்வாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி

தன் தந்தை வீரப்பன் பற்றி , ஸ்வாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி


உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் , பிரபாதேவி , வித்யாராணி என்கிற மகள்களும் உண்டு.

இவர்களில் முத்துலட்சுமி, தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மகளிரணி பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில், வித்யாராணி வீரப்பனுக்கு கடந்த 15-ம் தேதி தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

வித்யாராணி வீரப்பன் காதல் திருமணம் செய்து கொண்டதால், இவர் தற்போது, கிருஷ்ணகிரியில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசிக்கிறார். வழக்கறிஞரான இவர், அங்கு சிறுவர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வித்யாராணி வீரப்பன், அப்பாவை என்னுடைய வாழ்க்கையில் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போ, எனக்கு மூன்று வயது, என்னோட தாத்த ஊரு கோபிநத்தத்துல நான் இருந்தப்போ காட்டுல இருந்து திடீர் என்று வெளியே வந்த அப்பா என்ட்ட 10 நிமிடம் பேசினார்.

நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும் என்று தான் என்கிட்ட சொன்னாரு, ஆனால், அதன் பின் அவரை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வார்த்தை என் மனதுக்குள் ஆழமா பதிந்துவிட்டது.

என்னால மருத்துவர் ஆக முடியலானாலும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செஞ்சிட்டு வாரேன் என்று கூறியுள்ளார். கட்சியில் கிடைத்த புதிய பதவி குறித்து வித்யாராணி கூறுகையில், என் வாழ்க்கைல நான் சந்திக்காத பிரச்னையே இல்லை.

அரசியல்லையும் எதிர்நீச்சல் போடுவேன். வீரப்பன் வீட்டுக்குள் இரு கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதும் சுவாரஸ்யத் தகவல். வித்யாராணியின் தாய் முத்துலட்சுமி பா.ம.க- விலிருந்து உடைந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ஏற்கெனவே, சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததால், பொன் . ராதாகிருஷ்ணன் வேண்டுகோளை வித்யாராணி ஏற்று பா.ஜ.க. வில் ஐக்கியமானார்.

ஒரே வருடத்தில் புதிய பதவி அவருக்குக் கட்சியில் கிடைத்துள்ளது. கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும் படித்தது எல்லாம் சென்னை தான். ஸ்ரீபெரும்புத்தூர் செயின்ட். ஜோசப் பள்ளி அயனாவாரம் பெத்தலகேம் பள்ளியில் படித்தேன்.

அதனால், நானும் ஒரு சிட்டி பொண்ணு தான். அரசியல்லயும் கண்டிப்பா நான் ஜெயிப்பேன். அம்மா வேற கட்சில, நான் வேற கட்சில இருந்தாலும் ஒருவரோட விஷயத்துல மற்றவங்க தலையிட மாட்டோம். நான் தேசிய கட்சியை தேர்வு செய்து அதில் இணைந்திருக்கிறேன். பிரதமர் மோடி இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷைனாக இருக்கிறார். எனக்கும், அவர்தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like