மூத்த நடிகர் ஜி.வி.பாபு காலமானார்..!

மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.பாபு காலமானார். சில காலமாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரங்கலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
ஜி.வி.பாபு கடைசியாக தெலுங்கு படமான பாலகத்தில் நடித்தார். அவரது மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் வேணு யெல்டாண்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு மனமார்ந்த குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.
"ஜி.வி. பாபு இப்போது இல்லை. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் நாடகத்திலேயே கழித்தார். கடைசி நாட்களில், பாலகம் மூலம் அவரை அறிமுகப்படுத்தும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று வேணு யெல்டாண்டி எழுதினார்.
జి వి బాబు గారు ఇకలేరు🙏
— Venu Yeldandi #Balagam (@VenuYeldandi9) May 25, 2025
ఆయన జీవితం మొత్తం నాటక రంగంలోనే గడిపారు..
చివరి రోజుల్లో ఆయన్ని బలగం ద్వారా పరిచయం చేసే భాగ్యం నాకు దక్కింది🙏🙏
అయన ఆత్మ శాంతించాలి అని కోరుకుంటున్నాను 💐🙏#balagam #artist #stage #plays #natakam pic.twitter.com/fzDHReHt8g