கொலைக்களமான வேலூர்… அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!

முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் ஆர்.எஸ்.நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சாலமன் (38)என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்து, வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வீசிச் சென்றனர்.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர் கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் சாலமனை கொலை செய்ததாக ஆர்.எஸ்.நகரை சேர்ந்த விஜய் (26), ப்ரவின்குமார் (25) உள்ளிட்ட ஆறுபேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
இதேபோல் வேலூர் அம்மனாங்கோட்டை பகுதியை சேர்ந்த கோபி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி ரமணியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு சென்று பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரமணியின் உறவினர் இறப்புக்கு கோபி மற்றும் ரமணி ஆகியோர் சொந்த ஊரான வேலூர் அம்மனாங்குட்டைக்கு வந்துள்ளனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த ரமணியின் முன்னாள் கணவர் சரவணன் கோபியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சரவணனை தேடிவருகின்றனர்.
newstm.in