1. Home
  2. தமிழ்நாடு

இன்று வருதினி ஏகாதசி : இன்று மறந்தும் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதீங்க..!

1

ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். இது இந்து மதத்தில் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக விஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு இது சிறப்பான நாள். இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வணங்குவார்கள். இதனால் ஆன்மீக வளர்ச்சி கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். பாவங்கள் நீங்கும். வைகாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி என்று பெயர்.

இந்த வருடம் ஏப்ரல் 24 ம் தேதி வியாழக்கிழமை அன்று இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. அன்று சில விதிமுறைகளை பின்பற்றினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும். விஷ்ணுவின் அருளால் நன்மைகள் அதிகரிக்க ஏகாதசி விரதம் அன்று என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என சில விதிமுறைகள் உள்ளன. வருத்தினி ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏகாதசி விதிமுறைகள் :


1. பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும். புனித நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது.
2. அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இவை தூய்மை இல்லாதவை. விரதத்தின் ஒழுக்கத்தை கெடுக்கும்.
3. சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். விஷ்ணுவின் முன் விரதம் இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் விரதம் இருக்க வேண்டும்.
4. அரிசி மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று இவை தடை செய்யப்பட்ட உணவுகள்.
5. துளசி இலைகளை பறிக்கக்கூடாது. அது துளசி தேவியை அவமதிக்கும் செயலாகும். துளசி செடியை முதல் நாள் வணங்கி, விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கலாம்.
6. ஏகாதசிக்கு முந்தைய நாள் தலைக்கு குளிக்க வேண்டும். ஏகாதசி அன்று குளிக்க கூடாது. இது ஆன்மீக ஒழுக்கத்தை காக்கும்.
7. பகவத் கீதை போன்ற புனித நூல்களை படிக்க வேண்டும். விஷ்ணுவின் மந்திரங்களை சொல்ல வேண்டும். இதனால் மனம் அமைதியாக இருக்கும்.
8. பிரசாதம் செய்ய எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. நெய் பயன்படுத்தலாம். அது தூய்மையானது.
9. துவாதசி அன்று விரதத்தை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.
10. தூங்கக்கூடாது. பொய் பேசக்கூடாது. கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது.

Trending News

Latest News

You May Like