இப்படி செய்தால் இனி பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக தண்டனை கொடுக்க வேண்டும் - வரலட்சுமி சரத்குமார்..!
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி "போடா போடி" திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பல வாரிசுகளின் குழந்தைகள் பெற்றோரைப் போலவே தொடர்ந்து ஜொலிக்க முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அந்த வரிசையில் தான் வரலட்சுமியும் இருக்கிறார். ஆரம்பத்தில் போடா போடி திரைப்படம் வரலட்சுமிக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிறகு நிலையில் திடீரென்று தமிழ் சினிமாவில் படங்களை குறைத்துக் கொண்டார்.
மற்ற மொழிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். அதற்கு காரணம் தனக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக நல்ல கேரக்டருடைய வாய்ப்புகள் வரவில்லை அதனால் தான் நான் நடிக்கவில்லை என்று வரலட்சுமி விளக்கம் கொடுத்து இருந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இப்போது கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் வரலட்சுமியிடம் காதலில் பெண்களை ஆண்கள் ஏமாற்றி விடுகிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு வரலட்சுமி பதில் அளிக்கையில், பொதுவாக காதலில் ஆண்கள் மட்டும் தான் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று இல்லை. சில பெண்களும் ஆண்களை ஏமாற்றி விடுகிறார்கள். இதில் யார் ஏமாற்றினாலும் தவறுதான் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வரலட்சுமி பதில் அளிக்கையில், மற்ற நாடுகளில் ஒரு பொருளை திருடினாலே அவர்களுக்கு உடலில் ஒரு பாகத்தை வெட்டி தண்டனை கொடுக்கிறார்கள். ஆனால் நம்முடைய இந்தியாவில் அதுபோன்ற தண்டனை இல்லை. அப்படி இருந்தால் இதுபோன்ற கொடியவர்களுக்கு பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக தண்டனை கொடுக்க வேண்டும் அப்படி பார்த்தால் தான் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
.png)