1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை மீறி பேட்டி கொடுத்த வானதி சீனிவாசன்..!

1

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாமல் பாஜக கூட்டணி அடைந்த படுதோல்வி அடைந்தது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் கணிசமான தொகுதிகளை கைப்பற்றி இருக்கலாம் என்றும், அந்தக் கூட்டணியை முறித்த அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணி இத்தகைய தோல்வியை அடைந்ததாகவும் சில கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்தார் அண்ணாமலை. மேலும், இனி விமான நிலையங்களிலோ அல்லது பொது இடங்களிலோ தமிழக பாஜக நிர்வாகிகள் யாரும் பேட்டி அளிக்க மாட்டார்கள் என்றும், அவரவர் அலுவலகங்களில் மட்டுமே பேட்டி தருவார்கள் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். அண்ணாமலை இவ்வாறு கூறி ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய அவரிடம், அண்ணாமலையின் அறிவுறுத்தல் பற்றி நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "நீங்கள்தான் எதையாவது கேட்டு வம்பில் மாட்டிவிட்டு விடுகிறீர்களே.." என்று சிரித்தவாறு கூறினார். இதனைத் தொடர்ந்து, தனது கோவை தெற்கு தொகுதியில் அங்கன்வாடி மைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன், அங்கேயும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like