துரை வைகோ முடிவால் ஷாக்கான வைகோ..!

மதிமுகவுக்குள் மோதல் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இடையே மோதல் நிலவியது. மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என திருச்சியில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மல்லை சத்யாவுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் செயல்படுவதை வைகோ விரும்பவில்லை. இதனால் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என வைகோ அண்மையில் கண்டிஷன் போட்டிருந்தார். ஆனால் மல்லை சத்யா விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் மல்லை சத்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள் பலன் தராததால் துரை வைகோ கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக துரை வைகோ விடுத்துள்ள அறிக்கையில் , கட்சித் தலைவருக்கு அவ பெயர் ஏற்படுத்தி கட்சியை சிதைக்கின்ற வேலையை ஒருவர் மறைமுகமாக செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் கட்சிக்கு தீரா பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் தொடர்ந்து கட்சி பணியாற்ற விரும்பவில்லை எனவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இயக்கத்திற்கோ பொதுச்செயலாளருக்கோ தன்னால் எள் முனை அளவு கூட சேதம் வந்துவிடக்கூடாது என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ள துரை வைகோ, தொண்டனாக கட்சிக்காக உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது மகனான துரை வைகோவின் இந்த முடிவு குறித்து மதிமுக தலைவர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சிப் பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோவின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோவின் விலகல் முடிவை தொலைக்காட்சியை பார்த்தே தெரிந்து கொண்டதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.