1. Home
  2. தமிழ்நாடு

உஷார்! தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

உஷார்! தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!


வட சென்னையை விட தென் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஆயிரத்துக்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு தற்போது உயரத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து 1,200க்கும் அதிகமானோருக்கு தினமும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேற்கு மாம்பலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தெரு அடைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் பாதிப்பு அதிகரித்தாலும் இந்த முறை தென் சென்னை பகுதிகளில் பரவல் அதிகமாகவுள்ளது.

உஷார்! தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

தற்போது தண்டையார்பேட்டையில் 766, ராயபுரத்தில் 885 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஆனால் கோடம்பாக்கத்தில் 1279, அண்ணாநகரில் 1188, தேனாம்பேட்டையில் 1147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்த வரக்கூடிய நான்கு மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து பகுதி மக்களும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like