1. Home
  2. தமிழ்நாடு

USA VS IRE டி20 கிரிக்கெட் போட்டி : மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்..!

1

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றிருக்கிறது.

 இன்று (ஜூன் 14)  நடைபெறும் 30 வது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஏனென்றால் இதுவரை அமெரிக்க அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியையும் அமெரிக்கா வீழ்த்தி இருந்தது.  அதேநேரம் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி ஒரு வேளை மழையால் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கான சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அமெரிக்க அணி தோல்வி அடையும் பட்சத்தில் தாங்கள் விளையாடும் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும். அதனால் இன்று நடைபெறும் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 இன்றைய 30வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெறும் இப்போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 8 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி இதுவரை தொடங்காததால் 5 ஓவர் கொண்ட போட்டியாக இரவு 11.46 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. மழையின் தீவிரம் சற்று குறைந்தாலும் மிதமான மழையின் காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தபாடில்லை.ஒரு கட்டத்தில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Trending News

Latest News

You May Like