ஆயிரம் மடங்கு பதிலடி கொடுக்கப்படும்- ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!
ஆயிரம் மடங்கு பதிலடி கொடுக்கப்படும்- ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்த கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை படுகாயம் அடையச் செய்தது.
அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதில் “அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.