1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்க அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதிவு..!

1

கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோபைடன் மூத்த மகன் ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட  போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில்  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது. 

அதன்படி  இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோபைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.  

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது.

ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்க துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.  ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். 

Trending News

Latest News

You May Like