1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு!  அதிரடி காட்டிய இந்தியா!

அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு!  அதிரடி காட்டிய இந்தியா!


நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தலைநகர் டெல்லியில், இன்று காலை நிலவரப்படி காற்று தரக் குறியீடு அபாய அளவை தாண்டியது. ஆனந்த் விகார் பகுதியில் 401 புள்ளிகளாகவும், அலிப்பூரில் 405 புள்ளிகளாகவும், வசீர்பூரில் 410 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து, காசு மாசுவை தடுக்கும் வகையில், மத்திய அரசு இன்று புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, இதனையடுத்து, காற்று மாசு ஏற்படுத்தும் நபர்கள் அல்லது நிறுவனம் ஆகியோரை தண்டிக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசை தடுக்க தனியாக ஒரு வாரியம் அமைக்கவும், இந்த வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நிமியக்கப்பட உள்ளனர்.

வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் தான் காற்று மாசடைந்துள்ளதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் அண்மையில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, இந்தியாவில் காற்று மாசு அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like