அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/7206e8affa8dd957bd307eb1b8df3dc6.jpg?width=836&height=470&resizemode=4)
அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் 41 வயதான ஹீதர் பிரஸ்வ் என்பவர் நர்ஸ் ஆக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றிய, இவர் 17 நோயாளிகளை கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.
29 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். இதனால் 17 நோயாளிகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹீதர் பிரஸ்வ் 3 கொலை வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டார்.
இதையடுத்து, நோயாளிகளுக்கு வேண்டுமென்றே, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.