1. Home
  2. தமிழ்நாடு

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு..!

1

யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மே 26 நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுகளை மே 26ம் தேதி நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வை ஜுன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Trending News

Latest News

You May Like