160 கிலோமீட்டர் வேகம்..! கோவை டூ சேலம் வெறும் 90 நிமிடத்தில் செல்லலாம்..!

தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு தலைநகர், புது டெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டில் ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
1 மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில், செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே அமைப்பினை, 3 வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், விரிவான சாத்தியக்கூறிகள் ஆய்வு ஆராயப்பட உள்ளன. இதுகுறித்து அறிவிப்பினை, பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.
மொத்தம் மூன்று வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவை,
- சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் (167 கிலோமீட்டர்)
- சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் (140 கிலோமீட்டர்)
- கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் (185 கிலோமீட்டர்)
கோயம்புத்தூரில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சேலத்திற்கு, 185 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், நீண்ட தூரத்தை ஒரு சில நிமிடங்களில் கடந்து விட முடியும். கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் இந்த போக்குவரத்து அமையப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கப்பட உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களும் மிக முக்கிய நகரங்களாக உருவெடுத்து வருகின்றன. அதிவிரைவு போக்குவரத்து சேவை என்பது, இந்த நகரங்களின் வளர்ச்சியை இரண்டு மடங்காக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு மண்டலத்தில் RRTS ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கண்டு புதிய முதலீடுகள் குவிந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். கிட்டதட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு இணையானது என்று RRTS-ஐ கூறலாம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒன்று அல்லது இரண்டு கிலொமீட்டர் தூர இடைவெளியில் அமைந்திருக்கும்.
RRTS ரயில் நிலையங்கள் 10 கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்திருக்கும். இந்த ரயில்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும். ரயிலில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். முழுவதும் ஏசி வசதி கொண்டது.