மறந்துடாதீங்க...! இதை செய்யலைன்னா ரூ. 10,000 அபராதம்! தேதி நீட்டிக்கப்படாது!
ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைப்பதற்கான காலகெடு மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர், பான் எண் தொடர்பான பரிவர்த்தனையை செய்ய முடியாது. அபராதம் ரூ.10,000 விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என 2017 முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டு பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தற்போது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட இந்த தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதற்கான அபராதம் ரூ10000 விதிக்கப் பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கத் . தவறினால் அந்த பான்கார்டு பயனற்றதாக அறிவிக்கப்படும். வங்கி கணக்கு துவங்க, ஓட்டுநர் உரிமம் இவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு அபராதம் கிடையாது. ஆனால் வங்கிக் கணக்கில் 50,000க்கு மேல் டெபாசிட் செய்தாலோ, பணப்பரிவர்த்தனை செய்தாலோ பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.