அங்கிள் பெர்ஸி காலமானார்..!

உலக ரசிகர்களால் 'அங்கிள் பெர்ஸி' என்று அழைக்கப்படும் பெர்ஸி அபேசேகர 1979 உலகக்கோப்பை முதல் இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்து வந்தார். ஆனால் 1996-ம் ஆண்டு தான் அவர் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் அவர் காலமானார்.
இவரது மறைவுக்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல் அவர் குறித்து நினைவுகள் சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா உள்ளிட்ட வீரர்கள் பகிர்ந்துள்ளனர். தனது முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்திற்கும் நேரில் வந்து பெர்ஸி ஆதரவு அளித்தார் என்று குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் அங்கிள் பெர்ஸி பரிட்சயம்.கடந்த 2015-ம் ஆண்டு விராட் கோலி டிரெசிங் ரூமிற்கு பெர்ஸியை அழைத்துச் சென்று கவுரவித்தார். அதே போல் ரோகித் ஷர்மா, பெர்ஸியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர. தற்போது உலகக்கோப்பை போட்டியைக் காண இவர் வரவில்லை.
உடல் நலக்குறைவு காரணமாக வராமல் இலங்கையிலேயே இருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
From my debut till my last game Uncle Percy was a constant. His contribution to the game in Sri Lanka stands equal to any of the players that have worn the shirt. His energy, his passion, knowledge and rhyme will be sorely missed. Rest in peace Uncle Percy https://t.co/0bR93rTBg0
— Kumar Sangakkara (@KumarSanga2) October 30, 2023