1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களுக்காக பாதுகாத்து வைத்திருந்த தகவலை ஒரே நொடியில் போட்டுடைத்த உதயநிதி…. கோபத்தில் லோகேஷ் ரசிகர்கள்…!

1

தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 09.00 மணிக்கு தான் திரையிட வேண்டும்; இறுதி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்; ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்; உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. இருப்பினும், இது வரையிலும் படத்தை 4 மணிக்கு வெளியிடவும் தொடர்ந்து படக்குழு முயற்சித்து வருகிறது. இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்

இந்நிலையில், லியோ படத்தை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், விஜய்க்கும், படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இறுதியில் லியோ படம் எல்.சி.யூ. என பதிவிட்டிருக்கிறார். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒரு வருடங்களாக ரசிகர்களுக்காக பாதுகாத்து வைத்திருந்த தகவலை ஒரே நொடியில் போட்டுடைத்ததாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like