1. Home
  2. தமிழ்நாடு

திருட முடியாத ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து எரிப்பு!

திருட முடியாத ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து எரிப்பு!


வீட்டில் திருட முடியாத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்த பிரேம் நவாஸ் என்பவர் தனது நண்பர் யோகராஜின் இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார்.

அப்போது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நவாஸ் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து தெருவை சேர்ந்த அஜீத் என்பவர் இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை துணியில் நனைத்து வண்டியை கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அஜீத் சில தினங்களுக்கு முன் நவாஸ் வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போது திருட முடியாததால் ஆத்திரம் அடைந்து தற்போது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்து இருசக்கர வாகனத்தை கொளுத்தியது தெரியவந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like