அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் படுகாயம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/15a4eb040ec4c16dd947b2dee28e5788.png?width=836&height=470&resizemode=4)
இன்று நண்பகலில் அரசு நகர பேருந்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளித்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
டிராக்டருக்கு வழி கொடுத்த போது நிலை தடுமாறிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.