1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் ஏர் ஹார்ன் பயன்படுத்தியதால் 2 பேர் பலி..! தடை விதிக்க கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு..!

1

வாகனங்களில் ஒலி எழுப்பும் ஹார்ன் சத்தமானது, அதை கேட்பவா் ஒருவரையொருவர் நெருங்கும் போது ஒலியின் அதிர்வெண் குறிப்பிட்ட அளவில் தோன்றும். வாகனங்கள் நெருங்கி வரும்போது உச்சஸ்தாயில் ஒலி கேட்கும். இவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்போது, ஒலியின் அதிர்வெண்  தோன்றும். அதனால் பேருந்து விலகிச் செல்லும்போது குறைந்த அளவில் கேட்கும். இந்த விளைவுக்கு டாப்ளர் விளைவு என்று பெயா். ஹாரனும் கேட்பவரும் ஒரே வாகனத்திலிருந்தால் இரண்டும் ஒரே வேகத்தில் செல்வதால் ஒலியின் அதிர்வெண் மாற்றமில்லாமல் தோன்றும்.

மனிதர்களால் கிட்டத்தட்ட 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உள்ள ஒலி அலையை கேட்க முடியும். இதில் குறைந்த அதிர்வெண் உள்ள ஒலியானது குறைந்த சுருதியும் அதிக அதிர்வெண் உள்ள ஒலியானது அதிக சுருதியும் கேட்கும். 

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக சாலையில் இயக்கியதோடு, ஏர் ஹாரன் அடித்ததில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் கூடலூர் நகராட்சியில் பணியாற்றி வந்த அசோக்குமார் மற்றும் அவரது 3 வயது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

1

ஏர் ஹாரன் ஒலி எழுப்பியபடி அதிவேகமாக வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை சட்டக்கல்லூரி 4 ஆம் ஆண்டு மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு சம்பத்திற்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like