1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நகை கடையில் துப்பாக்கி முனையில் நகை கொள்ளை - இருவர் கைது..!

1

பிரபல நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணியாளர்களை மிரட்டி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் உள்ள கோபாலி சௌக் கிளையில் இன்று காலை 10 மணிக்கு  துப்பாக்கிகளுடன் ஒரு கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அந்த கொள்ளை கும்பல் துப்பாக்கிகளை காட்டி நகைக்கடை ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களை மிரட்டி அங்கிருந்த தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அர்ரா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கொள்ளை சம்பவம் குறித்து நகைக்கடை கிளை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய்  , ” கொள்ளையர்கள் தங்கச் நகைகள், செயின்கள், தங்க வளையல்கள் மட்டுமின்றி சில வைர நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும்.

கொள்ளையடிக்கப்பட்ட நேரம் காலை நேரம். மாலை நேரமோ, இரவு நேரமோ அல்ல.  காவல்துறைக்கு போன் செய்தோம்.  அந்த சமயம் எங்களுக்கு போதிய உதவியோ, சரியான பதிலோ கிடைக்கவில்லை. இந்தத் கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாக்கியதில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் ஊழியர்கள் தலையில் துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர் என்றும், இந்த கொள்ளையில் குறைந்தது 8 கொள்ளையர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நகை கொள்ளை

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அரா – பாபுராவிலிருந்து டோரிகஞ்ச் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படியான 6 நபர்கள்  செல்வதை போலீசார் கண்டனர்.  


இதனையடுத்து, போலீஸ்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2 கொள்ளையர்களின் கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. துப்பாக்கி குண்டுகள் காயத்துடன் அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கொள்ளையடிக்கப்பட்ட குறிப்பிட்ட நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளனர்.   

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இதில், கெள்ளையர்கள் 6 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே, தப்பியோடிய மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like