ஓடும் லாரியில் இருந்து இரண்டரை கோடி மதிப்புள்ள செல்ஃபோன்கள் கொள்ளை!

சென்னையில் இருந்து டெல்லி சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்போன்கள் கண்டெய்னரில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் இரவு பகலாக கண்டெய்னர் பயணம் செய்யும் நிலையில் இடையே ஓடும் லாரியில் கொள்ளை போவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தெலங்கானா பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களில் 3 முறை கண்டெய்னர்களில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in