1. Home
  2. தமிழ்நாடு

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி..!

1

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச் சகோதரர்கள். இவர்கள் இருவரும் நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் தலா 478 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரட்டைச் சகோதரர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து, ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like