1. Home
  2. தமிழ்நாடு

த.வெ.க நிர்வாகி போக்சோ வழக்கில் கைது.. 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு..!

Q

அரூர் அருகே 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளியில் உள்ள அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் சித்தப்பா உறவு முறையான தொழிலாளி சுதாகர் (வயது 45) என்பவர் அங்கு வந்தார்.
அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதனால் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமி சைல்டுலைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் சுதாகர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சுதாகரை கைது செய்த போலீசார் தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சுதாகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சுதாகர் தமிழக வெற்றிக்கழகத்தில் அரூர் பகுதி நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like