1. Home
  2. தமிழ்நாடு

120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு த.வெ.க.,வில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!

Q

த.வெ.க., கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் மாநில நிர்வாகத்திலும், பல்வேறு பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருந்தன.

இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், த.வெ.க.,வின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கட்சி அமைப்பானது சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், 2 துணைச் செயலாளர்கள் , 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தை தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிய விஜய், கட்சி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் நியமிக்க பணம் வசூல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துக்கு விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இதில் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like