திமுக ஆட்சியின் மக்கள் விரோத சாதனைகளை பட்டியலிட்ட டிடிவி தினகரன்..!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“செய்யக்கூடாதவற்றை செய்தாலும், செய்ய வேண்டியவற்றை செய்யாமலிருந்தாலும் கேடு ஏற்படும்” என வள்ளுவர் கூறியது போல, திமுக அரசின் நான்கு ஆண்டுகள் மக்களுக்கேதிரான ஆட்சி, ஊழல் மற்றும் மோசடிகளில் மூழ்கியுள்ளது.
முதல் சாதனையாக திமுக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கி பதவியிலிருந்து நீக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், “அண்ணாவின் மூச்சாக இருந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முழுமையாக மரணித்துவிட்டன” என்றார்.
இரண்டாவது சாதனையாக, அம்மா அரசு துவக்கிய தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, சைக்கிள், அம்மா மருந்தகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை முற்றிலும் முடக்கப்பட்டது.
மூன்றாவது சாதனையாக, கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சட்ட ஒழுங்கு முற்றிலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இது சமூக விரோத ஆட்சியாகவே பார்க்கப்படுகிறது.
நான்காவது சாதனையாக, மண், கனிம வள கொள்ளைகளை எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். அதற்கு பின்னால் திரை உலகுக்கே அதிர்ச்சி தரும் கதைகளை உருவாக்கி மக்கள் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கப்படுகிறது.
ஐந்தாவது சாதனையாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்கள் குழு பயனின்றி, இந்தியாவின் மிக அதிக கடன் பெறும் மாநிலமாக தமிழகத்தை மாற்றியது என்றும் டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டணி வியூகம், பிரச்சார கணக்குகளை வகுப்பதில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே திமுகவின் மக்கள் விரோத சாதனைகளை டிடிவி தினகரன் பட்டியலிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் தேர்தல் திமுகவை ஆட்சியை விட்டு இறக்குவதில் தீவிரமாக உள்ளார்.