1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் பாதுகாப்பு இணையத்தை முடக்க முயற்சி...?

1

இந்தியா மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முக்கிய இணையதளங்களை ஊடுருவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய இராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுத் நிறுவனம் ஆகியவற்றின் முக்கிய தரவுகளை ஊடுருவியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்மர்ட் வெகிக்கிள் நிறுவனத்தின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலையடுத்து, இந்திய பாதுகாப்பு இணையதளம் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டது. அதில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய முழுமையான ஆடிட் செயல்முறை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு துறையின் இணைய தளங்களில் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட நான்கு சைபர் ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், இனிமேலும் அத்தகைய முயற்சிகள் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களுக்கு சந்தேகத்திற்கிடமான இணையச் செயல்பாடுகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல நாடுகளின் உதவிகளை கேட்ட வண்ணம் உள்ளது. எனினும் எல்லா நாடுகளும் இந்த விஷயத்தில் இந்தியா பக்கம் தான் உள்ளன. குறிப்பாக இந்தியாவுடனான போர் திட்டத்தை கைவிடும்படியும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட கூடாது என்றும் உலக நாடுகள் அறிவுறுத்தி உள்ளார். ஜப்பான், ரஷ்யா போன்ற பல நாடுகள் இந்தியாவுக்கு துணை நிற்கும் என கூறிவிட்டனா். இதனால் பாகிஸ்தான் என்ன செய்வது என அறியாது திகைத்து உள்ளது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான், இந்தியா மீது சைபர் தாக்குதலை தொடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like