1. Home
  2. தமிழ்நாடு

வேகமாக வந்த லாரி.. பைக் மீது நேருக்கு நேர் மோதல்!

வேகமாக வந்த லாரி.. பைக் மீது நேருக்கு நேர் மோதல்!


திருச்செந்தூர் அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு மோர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சிவகுமார் (28). இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர். இறந்து போன சிவகுமாருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like