1. Home
  2. தமிழ்நாடு

உல்லாசத்தின் போது தொந்தரவு.. கள்ளக்காதலன் தாக்கியதில் தாய் கண்முன்னே சிறுமி பலி !

உல்லாசத்தின் போது தொந்தரவு.. கள்ளக்காதலன் தாக்கியதில் தாய் கண்முன்னே சிறுமி பலி !


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். ஓட்டுநரான இவர் கடந்த 10ஆம் தேதி எழிலரசி என்ற பெண் மற்றும் அவரது 3 வயது மகள் மனுஸ்ரீயுடன் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அவர்கள் இருவரும்
குழந்தைய நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் மனுஶ்ரீ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் இறந்த குழந்நதையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு இவர்கள் இருவரும் மாயமாகிவிட்டனர்.

உல்லாசத்தின் போது தொந்தரவு.. கள்ளக்காதலன் தாக்கியதில் தாய் கண்முன்னே சிறுமி பலி !

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் நின்ற இருவரையும் போலீசார்  பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கணவன் - மனைவி இல்லை என்பதும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி எழிலரசி(28).

மகேந்திரன் - எழிலரசி தம்பதிக்கு தீரன் பிரேவ் என்ற 5 வயது குழந்தையும், மனுஶ்ரீ ஆகிய 2 குழந்தைகள் இருந்துள்ளனர். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் இறந்துவிட்டார்.

உல்லாசத்தின் போது தொந்தரவு.. கள்ளக்காதலன் தாக்கியதில் தாய் கண்முன்னே சிறுமி பலி !

பின்னர் தனியாக பிள்ளைகளுடன் வசித்து வந்த எழிலரசி ஹலோ ஆப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் ராமதாஸ் அறிமுகமாகியுள்ளார். அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றபோதும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் செல்பான் எண்களை மாற்றிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். அதேபோல் வேளாங்கண்ணிக்கு அடிக்கடி வந்து தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.

அதேபோன்று இந்த முறை ராமதாஸ் விரைவாக வந்ததாகவும், அப்பெண் குழந்தையுடன் வந்ததால் தாமதம் ஏற்பட்டதாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ் குழந்தையை அடித்ததாக தெரிகிறது. எனினும் சமாதானம் அடைந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை தொந்தரவு செய்துள்ளார்.

உல்லாசத்தின் போது தொந்தரவு.. கள்ளக்காதலன் தாக்கியதில் தாய் கண்முன்னே சிறுமி பலி !

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் குழந்தையை சரமாரியாக தாக்கி உள்ளார் .மேலும் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதனால் குழந்தை மயக்கமடைந்து விழுந்து குழந்தை உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ராமதாசையும் எழிலரசியையும் கைது செய்தனர்.  

newstm.in 

Trending News

Latest News

You May Like