1. Home
  2. தமிழ்நாடு

தமிழிசையை ரவுண்டுகட்டும் திருச்சி சூர்யா! புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும்....

1

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சமீபத்தில் பாஜக பிரமுகர்கள் மணல் கடத்தல் கும்பலிடம் 50 லட்சம் ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றம்சாட்டி அவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார். இதனை தொடர்ந்து இன்று பதிவிட்ட ட்வீட்டில், மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா? என்றும் கேட்டிருந்தார். அதோடு தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என்றும் விளாசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ட்வீட்டின் மூலம் தமிழிசையை சீண்டியுள்ளார் திருச்சி சூர்யா சிவா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு

புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா? உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா" என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திருச்சி சூர்யாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பாஜக நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்கவில்லை.


 

Trending News

Latest News

You May Like