1. Home
  2. தமிழ்நாடு

திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும் விபத்து : ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து - லாரி மோதி விபத்து..!

1

சென்னையில் இருந்து சாயல்குடியை நோக்கி தனியார் பேருந்து திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, டாரஸ் லாரியும், பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோத முற்படும் போது, விபத்தைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் முயன்றார்.

அப்போது, கோரையாற்றின் பாலத்தின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது. எதிர்பாராத விபத்து காரணமாக, அடுத்தடுத்து வந்த இரண்டு பேருந்துகளும், கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதின. விபத்து குறித்து பேருந்தின் ஓட்டுநர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருந்த போது, நெடுஞ்சாலையில் வந்த மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியிருந்த பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

ஒரே நேரத்தில் தொடர்ந்து ஐந்து பேருந்துகளும், லாரியும் என ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் 30- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like