1. Home
  2. தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை..!

1

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன் ஆண்டர்சன் (64). இவர், தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் அவர் மீது திடீரென மோதியது. பின்னர் அதே கார் பின்னோக்கி வந்து மீண்டும் அவர் மீது ஏறி இறங்கியது. இவ்வாறு இரண்டு முறை காரை ஏற்றிய நபர், காரில் இருந்து இறங்கி வந்து கத்தியால் சரமாரியாக குத்தினார்.

dead-body

இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீவன் ஆண்டர்சன் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த இந்த படுகொலை தொடர்பான சிசிடிவி வீடியோ கிளிப் வலைத்தளங்களில் பரவி வருகிறது.



இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்டீவன் மீது காரை ஏற்றி கொலை செய்தது காரோன் பிஷ்ஷர் (20) என்ற திருநங்கை என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like