1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் அதிர்ச்சி..! வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்களின் பயண நேரம் மாற்றியமைப்பதா..?

1

இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது வந்தே பாரத் ரயில் சேவை. பகல் நேர ரயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சேவை தமிழகத்திலும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு மற்றும் சென்னை - கோயம்புத்தூர் ஆகிய மார்க்கங்களுக்கிடையே முன்னரே இந்த சேவை அறிமுகமான நிலையில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை - திருநெல்வேலி மார்க்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இதன் காரணமாக ஏற்கெனவே இந்த மார்க்கத்தில் இயங்கி வந்த பிற ரயில்களின் பயண நேரம் அதிகமாக இன்று அக்டோபர் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  

ரயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை - சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் (சென்னை - மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு ரயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like