1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் ஷாக்..! இனி ரயில் பேண்ட்ரி கார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது..!

1

ஜூன் மாதத்திற்குப் பிறகு ரயில்களின் பேண்ட்ரி கார்களில் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் உணவு தயாரிக்கப்படாது. பேண்ட்ரி காரில், தண்ணீரை சூடாக்கலாம் அல்லது தேநீர் போன்றவற்றை மிகவும் அவசியமான போது மட்டுமே செய்யலாம். ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள IRCTC அடிப்படை சமையலறைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது 

இந்த மாற்றத்திற்குப் பிறகு ஐஆர்சிடிசி பான்ட்ரி காரை மொத்தமாக ஒரே இடத்தில் இயக்கத் தயாராகி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உணவுதான் இனி ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும். தற்போது வந்தே பாரத் ரயிலிலும் இதே அமைப்பு உள்ளது. அனைத்து பொருட்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பின்னர் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை அடுத்து வருகிற ஜூலை மாதம் முதல் ரயில்களில் சமையல் முறை முற்றிலும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய முறையின் கீழ் எந்தவொரு வழித்தடத்தின் ரயில்களிலும் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சமையல் வேலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்வேறு ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஒரே வழித்தடத்தில் ஐந்து முதல் ஏழு ரயில்களுக்கு அந்தந்த ஏஜென்சிகள் பொறுப்பாக இருக்கும். சம்பந்தப்பட்ட ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையைத் தொடங்கும். பின்னர் அங்கிருந்து ரயில்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.வடகிழக்கு ரயில்வே 80 பேண்ட்ரி கார்களை ஒரு கிளஸ்டராக பராமரிக்கும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தேதி வரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கேட்கப்பட்டுள்ளன. அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே சமையக் பொறுப்பு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like