தெலுங்கானாவில் சோகம்..! 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி..!

கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.