1. Home
  2. தமிழ்நாடு

தெலுங்கானாவில் சோகம்..! 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி..!

Q

தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம் பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம் மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர்.
கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like