புதுக்கோட்டையில் சோக சம்பவம்..! சோகத்தில் முடிந்த அண்ணன் தங்கை சண்டை..!

புதுக்கோட்டை அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்திரைகுமார் - ஜீவிதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் இருந்தனர். இதனிடையே இவர்கள் இருவரும் வீட்டில் இரு்நத போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். தங்கை கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த அண்ணன் அவரை காப்பற்ற கிணற்றில் அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.