1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரியில் சோகம்.. மாடியில் இருந்து குதித்து காவலர் தற்கொலை..!

புதுச்சேரியில் சோகம்.. மாடியில் இருந்து குதித்து காவலர் தற்கொலை..!


புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சி பள்ளி. இங்கு ஆள் சேர்ப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் (36). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தில் இருந்துள்ளார். இதற்காக கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விரைவில் புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால், காவலர் மகேஷ் சமீப காலமாக மிகவும் மன உளைச்சலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தன்வந்திரி நகர் போலீசார் காவலர் மகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட காவலர் மகேஷ்க்கு மனைவி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ ஹரி என்ற மகனும் உள்ளனர்.

காவலர் பயிற்சி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like