1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் சோகம்..! ஆம்னி பஸ்சில் பயணித்த இளம்பெண் இறந்த நிலையில் மீட்பு..!

1

கோவையை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 23). என்ஜினீயரிங் படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருடன் பணிபுரியும் ஒருவர் மகாலட்சுமியை ஆம்னி பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். மகாலட்சுமி பஸ்சின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அந்த நபர் பின்னால் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

நேற்று காலை 5 மணியளவில் அந்த பஸ் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். ஆனால் மகாலட்சுமி மட்டும் எழும்பவில்லை. அவர் அமர்ந்து இருந்த இருக்கையிலேயே படுத்து இருந்தார். உடனே அவருடன் வந்தவர், அவரை எழுப்ப முயன்றபோது எழும்பவில்லை. மாறாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் ஏறியதும் இரவு 11 மணியளவில் மகாலட்சுமி தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பஸ்சில் வந்து கொண்டு இருப்பதாக கூறி உள்ளார். ஆனால் திடீரென்று உயிரிழந்து விட்டார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும் என்றனர்.
 

Trending News

Latest News

You May Like