சென்னையில் சோகம்..! மர்ம பொருள் வெடித்து 12TH மாணவன் பலி..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0b42d99e07ac53cb2112c317dc53412e.jpeg?width=836&height=470&resizemode=4)
கொளத்தூர் முருகன் நகரை சேர்ந்தவர் ஆதித்ய பிரணவ் இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவரின் தந்தை ஹரிஹரன் கார் பேட்டரிகளை விற்று தொழில் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வைத்து பிரணவ் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக கெமிக்கல் மற்றும் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்த அதிர்ச்சியில் உயர்ந்த மாணவரின் தந்தை ஹரிஹரன் சில ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் மனைவி உயிரிழந்ததாகவும் தற்போது தனது ஒரே மகனையும் இழந்து நிற்பதாகவும் கூறி கதறி அழுதது காண்போரை சோகத்தில் தள்ளியது.