1. Home
  2. தமிழ்நாடு

சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!

சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!


சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசி அருகே களத்தூரில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டது. அதில் 7 அறைகள் தரைமட்டமானது. விபத்து தொடர்பாக உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடுமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சோகம்! சிவகாசி வெடி விபத்தில் உயிரிழப்பு 5ஆக அதிகரிப்பு!!

8 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி (34) என்பவர் சிகிச்சை பலனின்றி ம உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like