ஸ்டிக்கர் எடுக்காத போலீஸ் வாகனத்திற்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5250b6f547d260e87b568bbbc2dd4972.png?width=836&height=470&resizemode=4)
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஒட்டுவில்லைகளை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்தது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் வாகனங்களில் உள்ள வாகனங்களில் ‘போலீஸ்’ (காவலர்) என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நீக்கி, வேப்பேரி போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்தது.