1. Home
  2. தமிழ்நாடு

ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை...!

1

கோடை மழை பெய்து வரும் நிலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நீர் நிலைகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதைதொடர்ந்து இன்று முதல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை மலைப்பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆகாயகங்கை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆகாயகங்கை அருவி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆகாய கங்கை அருவியை காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். நேற்று பழைய குற்றாலம் அருவியில் குளித்த போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like