1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் மதுரை – மும்பை இடையே சுற்றுலா ரயில் சேவை..!

1

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பலர் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அவர்களின் வசதிக்காக “பாரத் கவுரவ் சுற்றுலா” ரயில் நாளை (செப்.28) மதுரை – மும்பை இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்:06905) நாளை மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். அதே போல அக். 4 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மும்பைக்கு வரும்.

அதே போல மருமார்கமாக அக். 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும். அதே ரயில் அக். 7 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மதுரைக்கு வரும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் 3 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. உஜ்ஜைன், மஹாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி, சாரநாத், அயோத்தியா, ப்ரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்ல இருக்கிறது.

Trending News

Latest News

You May Like