1. Home
  2. தமிழ்நாடு

நாளை வி.சி. கட்சியுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு..!

1

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. 

அதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நாளை 30-ம் தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு பேச்சு நடத்தவுள்ளது. கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like