நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க பெற்றோரே..!
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்நிலையில், வரும், 2022 - 2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (13-ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நாளை ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.