நாளை சித்ரா பவுர்ணமி..! நினைத்த காரியம் கை கூட இப்படி விளக்கேற்றுங்கள்..!

சித்ரா பவுர்ணமி நம்முடைய பாவங்களை போக்கிக் கொண்டு, அதன் மூலமாக துன்பங்கள் பலவற்றில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பக்தி, தானம், மற்றும் மத சடங்குகள் செய்வது வழக்கம். இந்துக்களும், புத்த மதத்தினரும் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் செய்யும் தானங்கள், வழிபாடுகள் கடவுளின் ஆசீர்வாதத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த புனித நாளில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பாவங்கள் செய்யாமல் இருக்க முடியும். மேலும், இந்த நாளின் ஆன்மீக பலன்களை அதிகரிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும். சிலவற்றை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
சித்ரா பவுர்ணமியில் செய்ய வேண்டியவையும், தவிர்க்க வேண்டியவையும் :
- பவுர்ணமி அன்று விஷ்ணுவை சத்யநாராயணராகவும், லட்சுமி தேவியையும் வணங்க வேண்டும். சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும். அதாவது, தண்ணீர் ஊற்றி வணங்க வேண்டும். இந்த நாளில் தெய்வீக சக்திகள் அதிகமாக இருக்கும். அதனால் வாழ்க்கையில் நல்ல ஆற்றல் பெருகும்.
- பவுர்ணமி அன்று கோயிலுக்கு சென்று வழிபடுவது, தானம் செய்வது, புனித நதிகளில் நீராடுவது நல்லது. இதனால் மகிழ்ச்சியும், வளமும் பெருகும்.
- தாமச உணவுகள், மது அருந்துதல், மற்றும் கடுமையான அல்லது தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை இந்த புனித நாளில் தவிர்க்க வேண்டும்.
- பவுர்ணமி அன்று தலைக்கு குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது. புராணங்களின் படி, பவுர்ணமி அன்று முடி வெட்டினால் பணம் இழப்பு ஏற்படும். வீட்டில் வறுமை வரும். ஆண்கள், பெண்கள், திருமணமாகாத பெண்கள் என எல்லோரும் இதை தவிர்க்க வேண்டும்.
- சித்ரா பவுர்ணமி அன்று சிவ பெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவதுடன், சித்ரகுப்தரையும் வழிபட வேண்டும்.
- சித்திரா பவுர்ணமி இரவில், நிலவொளியில் தியானம் செய்தால் நோய்கள் நீங்கும். உடல் நலம் பெறும். இது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக பயிற்சி.
- விஷ்ணுவுக்கு துளசி மிகவும் பிடித்தமானது. அதனால் பவுர்ணமி அன்று துளசி இலைகளை பறிக்க கூடாது. அது பாவம். அன்றைய நாளின் புனிதத்திற்கு எதிரானது.
- சித்ரகுப்தரின் உருவத்தை வரைந்து நாம் செய்த பாவங்களில் இருந்து விடுபட மன்னிப்பு கேட்டு, அவரை அருளை பெற வேண்டும்.
- சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பான வழிபாடாகும்.