1. Home
  2. தமிழ்நாடு

இன்று செவ்வாய்க்கிழமை முடி வெட்டுதல், சவரம் செய்யக்கூடாது... ஏன் தெரியுமா?

1

செவ்வாய்க்கிழமை, துர்கை மற்றும் லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இந்தியாவில் இந்துக்களால் நம்பப்படுகிறது.

இந்நாளில் இந்து மதத்தை பின்பற்றும் பெண்கள் வீட்டில் கண்டிப்பாக பூஜைகள் செய்கின்றனர்.இதை பாரம்பரியமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.இச்சமயத்தில், முடி வெட்டுதல் கூடாது என்று நமது முன்னோர்கள் கூறி உள்ளனர்.இது கடவுளுக்கு உகந்த செயல் அல்ல என்று கருதுகின்றனர் இதையே, நாமும் இன்று வரை பின்பற்றி வருகிறோம்.இதேயே போன்ற நமது முன்னோர்களால் கூறப்பட்ட வேறு சில காரணங்களையும் இங்கு காணலாம் வாருங்கள்...

இந்தியாவின் பல மாநிலங்களில், செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் கடன்கள் கொடுப்பதையோ, அல்லது கடன் பத்திரம் தருவதையோ செய்வது இல்லை.

இந்நாளில் தொண்டு நிறுவனத்திற்கு கூட மக்கள் பணம் கொடுப்பதைத் தவிர்த்து மற்ற நாட்களில் கொடுக்கின்றனர்.

இதற்கான காரணம், செவ்வாய்க்கிழமைகளில் நமது பணத்தை பிறர்க்கு கடன் ஆகவோ அல்லது வேறுவிதம் ஆகவோ கொடுத்தால் நம் வீட்டில் இருந்து செல்வ வளம் குறைந்து விடும். (லக்ஷ்மி தேவி செல்வச் செழிப்பைக் கொடுப்பவர்.இவ்வாறு செய்தால், கடவுள் ஆகிய லட்சுமி தேவி தன் வீட்டில் இருந்து சென்று விடுவாள்) என்று மக்கள் கருதுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை என்பது செலவுக்கான நாள் அல்ல. இது வருமானத்திற்கான நாள் என்று மக்கள் கருதுகின்றனர்.இந்த நாளில் பொருட்களையும் பணத்தையும் பிறருக்கு கொடுப்பது நமது வீட்டில் வறுமையை வரவைக்கும் என்று நினைக்கின்றனர்.எனவே, இந்த நாளில் எந்த ஒரு பொருளையும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

பொதுவாக பெண்கள் செவ்வாய்க் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது இல்லை... இதை, இந்து சமய பெண்கள் கடைப்பிடிக்கின்றனர்.அதே போல் தான், சிகை அலங்காரம், சவரம் மற்றும் நகங்களை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களையும் மக்கள் செவ்வாய்க் கிழமைகளில் செய்வதில்லை..அதே வகையான நம்பிக்கையை கொண்டு இருந்தாலும், சில குடும்பங்களில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமான வீட்டை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதை எந்த வகையிலும் நிறுத்துவது இல்லை.

ஆனாலும், குவிந்த குப்பைகளை வீசியெறிதல், கூளங்களை சுத்தம் செய்தல் போன்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்தும் பணிகளை மக்கள் செவ்வாய்க் கிழமைகளில் செய்வதில்லை.

ஹேர்கட், ஷேவ் மற்றும் நகங்களை வெட்டுதல் போன்ற காரியங்களை செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் போது வீட்டிற்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வெளியே எரிவது (அவைகள் குப்பையாக இருந்தாலும் சரி), பணம் கொடுப்பது மற்றும் அனுப்புவது போன்ற செயல்களும் கூட துரதிர்ஷ்டம் என்று கருதுகின்றனர்.எனவே, இதுவரை நாம் விவாதித்த இந்த நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்திற்கும் துரதிர்ஷ்டம் என்ற இந்த பெயர் மிகவும் பொருந்தும். 6.ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுதல் மற்றும் ஷேவிங் செய்தல் போன்ற செயல்களை பின்பற்றினால் ஒரு நபரின் ஆயுட்காலத்தில் சுமார் எட்டு மாதங்கள் குறைந்து விடும் என்று சொல்ல படுகிறது.

இதனாலும், இந்து சமய மக்கள் இச்செயல்களை பின்பற்றுவது இல்லை.

அறிவியல் ரீதியாக இது இன்றுவரை நிரூபிக்கப் படவில்லை. ஆனாலும், மக்கள் இதனை நம்புகின்றனர்.
மற்ற சில ஜோதிடர்களோ, செவ்வாய் கிரகத்தின் தெய்வம் செவ்வாய் ஆகும்.

இத்தெய்வம் ,மனித உடலின் இரத்தத்தில் வாழ்கிறது என்று நம்ப படுகிறது.மற்றும் மனிதனின் தலை முடி இரத்தத்திலிருந்து உருவாகிறது.இரத்த ஓட்டம் சீராக இல்லாத போது தான் முடி உதிர்வு பிரச்சனைகள் கூட ஏற்படும்.

எனவே, செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது இரத்த நோய்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நம்பிக்கையும் என்று வரை நிரூபிக்கப் படவில்லை.

எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும் செவ்வாய் (Mars ):

மற்றொரு ஜோதிட புராணத்தில் செவ்வாய் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதன் காரணம் , நமது முடியின் நிறம் கருப்பு.

கருப்பு நிறத்திற்கு உரியவர் சனி பகவான் (saturns) ஆவார்.

எனவே, சனி பகவான் நம் உடலில் முடியை நிர்வகிப்பவர் என்று நம்புகிறோம்

செவ்வாயின் ஆளும் தெய்வம் சனிபகவான். உண்மையில் சனி, செவ்வாயின் எதிர்மறை விளைவுகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார்.

நாம் ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், அது நமது விதியை ஆள்வதற்கு, சனி பகவானுக்கு சக்தியை கொடுக்கும்.

இதனால் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளை நம் மீது ஏற்படும்.

இதனால், நம் வாழ்வில் நிறைய முரண்பாடுகளைச் சந்திக்க நேரிடலாம்.

இருப்பினும், இது மற்ற ஆதாரங்களுடன் சரிபார்க்கப்படாத ஒரு விஷயம் மற்றும் அறிவியில் ரீதியாக நம்பத்தகுந்த நம்பிக்கையாக இன்னும் இது நிரூபிக்கப்படவில்லை. 8.நமது முன்னோர்களின் வார்த்தைக்கு என்றும் மரியாதை தருவோம்

செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டுவது மற்றும் ஷேவிங் செய்வது சரியா? தவறா? என்ற வாதங்கள் இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரும் அவர் எடுக்கும் முடிவை செயல்படுத்துவதில் அனைவரும் அவரது இதயத்தின் சொல்லை பின்பற்ற வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பெரியோர்களால் பகிர்ந்துகொள்ளப்படும் நம்பிக்கைகள் ஆன செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டல் மற்றும் ஷேவிங் செய்யாமல் இருத்தால், போன்ற விஷயங்களில் அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பது, நமது முன்னோர்களின் மனதை எந்த வகையிலும் பாதிக்காது என்பதினால் நாம் அவற்றை ஏற்று கொள்ளலாம்.

ஆயினும்,மரபு என்ற பெயரால் நாம் மூட நம்பிக்கைகளை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like