1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

1

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர். 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை  (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ம தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் 2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like